Monday, May 19, 2008

ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்

'ஜாக்' என்று தமிழ் பேசும் மக்களிடம் சுருக்கமாக அறிமுகமாகி இருக்கும் "ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்" என்ற அமைப்புதுவங்கப்பட்டு இருபது ஆண்டுகளாக இஸ்லாமிய மார்க்கத்தைஅதன் தூய வடிவில் ஜாதி பேதமின்றி அனைத்து மக்களுக்கும்அறிமுகபடுத்திக் கொண்டும் , அழைப்பு பணியிலும் கல்விபணியிலும் மற்றும் சமுக பணியிலும் அயராது பாடுபட்டுவருகிறது.


கடந்த ஒரு மாத காலமாக அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தனது அமைப்பின் கிளையை முறைப்படி ஆரம்பித்துள்ளது, அல் ஹம்துலில்லா... இதன் தொடர்ச்சியாக கடந்த 16-05-2008 வெள்ளிகிழமை அன்று துபாயில் தாயக அமீர் எஸ் .கே .கமாலுதீன் மதனி அவர்கள் தலைமையில் அமீரக செயற்குழு கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் ஒட்டு மொத்த அமீரக நிர்வாகம் தேர்ந்தெடுக்க பட்டது,

தேர்வு செய்யப்பட்டவர்கள் விபரம்

இன்சா அல்லாஹ்... அல் ஜன்னத் மாத இதழில் விரைவில் வெளிவரும்...

"ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்"

குர்ஆன் சுன்னாவை அடிப்படையாகக் கொண்ட தமிழகத்தின் முதன்மையான தவ்ஹீத் அமைப்பு

இந்த அமைப்பு - குழம்பிய குட்டை அல்ல...
சமுத்திரம்... மாபெரும் சமுத்திரம்...

ஆர்ப்பரிக்கும் அலைகள் இல்லாத அமைதியான சமுத்திரம்...

ஆள் பலம் காட்டி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கம் அல்ல..
இஸ்லாமிய பணி செய்து இறைவனின் அன்பை பெறுவதே நோக்கம்...
காகித பூக்கள் மீது வாசனை தெளித்து, வார்த்தை ஜாலங்களால்...இஸ்லாத்தின் பெயர்கூறி வியாபாரம் செய்வதல்ல நோக்கம்...

இஸ்லாமிய கோட்பாடுகளை, அதன் தூய வடிவில் இவ்வுலகிற்கு உணர்த்துவதே நோக்கம்...

தமிழகம் முழுவதும் எழுபதுக்கும் மேற்ப்பட்ட மர்கஸ்கள், கல்வி நிறுவனங்கள்,அனாதை இல்லம் என்று நிருவாகிக்கும் தனித்தன்மை...

இவைகள் அனைத்தும் பெரும் புகழ் பெறுவதற்க்கில்லை...

இவைகளை காட்டி லாபம் அடைய பணம் வசூலிப்பதற்காக நடத்தபடுபவை இல்லை...
புனிதமான நோக்கம், அது இறைவனின் அன்பை பெறுவதே...


சகோதரர்களே... ஜாக் அமைப்பில் இணையுங்கள்...தன்னலமற்ற ஒரு சேவைக்கு தயார் ஆகுங்கள்...

அன்புடன்
தோப்புத்துறை - ஹாஜாதீன்