Saturday, May 24, 2008

புதிய பள்ளிவாசல் திறப்பு விழா




கொடிக்கால்பாளையத்தில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா

திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையத்தில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா 23-05-08 இன்று காலை நடைபெற்றது.

தமிழ்க அமைச்சர்கள் மைதீன் கான், உபைதுல்லாஹ், ஜே. எம்.ஆரூண் எம்பி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன், மாநில மார்க்க அணி செயலாளர் மௌலவி ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினர்.


இந்நிகழ்வில் கொடிக்கால்பளையத்தைச் சேர்ந்த சகோதரர்கள் உலகெங்கும் இருந்து வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பல்வேறு ஊர்களைச் சேர்ந்த ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டனர்.

Friday, May 23, 2008

அல் ஜன்னத் இஸ்லாமிய மாத இதழ்

அல் ஜன்னத் இஸ்லாமிய மாத இதழ்

இந்த மாத இதழில்...

  • மார்க்க கல்வி ஏழை மக்கள் தான் பயில வேண்டுமா ? தலையங்கம்
  • வட்டியின்றி வாழ முடியாதா- எஸ். அபு புஷ்ரா
  • கல்வியை அடைவதற்கு பாத்து வழிகள் - எம்.எப் . அலி
  • மிஸ்காதுல் மசாபிஹ் ( தொடர் )- தமிழில் :எஸ். சையது அலி பைஷி
  • என் வீட்டுத் தோட்டத்தில் - ஜமீலா பின்த் இஸ்மாயில்
  • சஹாபாக்கள் வரலாறு - அப்துர் ரஹ்மான் மன்பஈ
  • ஆவின் அரசியல் - மதுரை அப்துல்லா மன்பஈ
  • மிகப்பெரிய அநீதி - தொகுப்பு : தேங்கை முனிப்
  • பொருளாதார சுதந்திரம்
  • பாதுகாப்பு கோருதல்
  • திரு குர்ஆன் வினா-விடை

மற்றும் பல தலைப்புகளில் ....

வாங்கி படித்து பயன் அடைவீர் ....

துபையில் தொடர்புக்கு : SULAIMAN 050 ௨௭௧௬௮0௧

கல்வி உதவித்தொகை அறிவிப்பு

கல்வி உதவித்தொகை அறிவிப்பு
பி.எஸ். அப்துல் ரஹ்மான் ஜக்காத் ஃபண்ட் பவுண்டேஷன்
நோக்கம் : சிறந்த மதிப்பெண் பெற்று, ஜகாத் பெறக்கூடிய குடும்ப சூழலில் படிப்பைத் தொடர முடியாத மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல்

தகுதி : நடந்து முடிந்துள்ள இறுதித் தேர்வில் குறைந்தது முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

பெற்றோர்களின் குறைந்த வருமானம் காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாதவர்களாய் இருத்தல் வேண்டும்.

விதிமுறைகள் :ஜகாத் தொகை பெறுவதற்கு தகுதியுடைவர்களாக இருத்தல்படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். தேர்வில் தவறினால் உதவித் தொகை நிறுத்தப்படும்.படிப்பு முடியும் வரை ஒவ்வொரு வருடமும் மதிப்பெண் பட்டியலை சமர்பித்தல் வேண்டும்.படிக்கின்ற போதும், படிப்பிற்கு பிறகும் ஒழுக்க நடைமுறைகளை / இஸ்லாமிய நடைமுறைகளை பின்பற்றுதல் வேண்டும்.விண்ணப்பங்கள் பெற மதிப்பெண் விவரத்துடன் கோரிக்கை மனு அனுப்பவும்.அல்லது விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட இணையத்தளத்தில் இருந்தும் பெறலாம்


பூர்த்தி செய்யப்பட்ட விண்ண்ப்பங்கள் வந்து சேர கடைசி நாள் செப்டம்பர் 30, 2008 ( முதலாம் ஆண்டு தொழில்நுட்ப படிப்புகள் )ஜுலை 31,2008 ( முதலாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் படிப்புகள் )ஜூலை 15,2008 ( முதல் ஆண்டு தவிர )

CONTACT

B.S. ABDUR RAHMAN ZAKAAT FUND FOUNDATION
BUHARI BUILDING NO 4
MOORES ROAD
CHENNAI 600 006
PHONE : 044 4226 1100 FAX : 044 2823
www.bsazakaat.orgஎ

Wednesday, May 21, 2008

நாகை மாவட்டம் தோப்புத்துறை யில் அவசர கால ஊர்தி சேவை

நாகை மாவட்டம் தோப்புத்துறை யில் அவசர கால ஊர்தி சேவை



நாகை மாவட்டம் தோப்புத்துறையில் ஜமாஅத் மன்றம் சார்பாக அவசரகால ஊர்தி ( ஆம்புலன்ஸ் ) வழங்க பட்டது,தோப்புத்துறை மக்களின் நீண்ட கால தேவைகளில் ஒன்றான ஆம்புலன்ஸ் வசதிக்காக ஜமாஅத்-தார்கள் முயற்சிகள் மேற்கொள்ள பட்டது, தோப்புத்துறை தொழிலதிபர் ஜனாப். ஆரிபா அவர்களின் நன்கொடையில் அதற்கான வாகனம் வாங்கப்பட்டது,இதன் மூலம் தோப்புத்துறை மற்றும் சுற்று வட்டார மக்கள் பயன் அடைவார்கள்,
ஜமாஅத் மன்றம் மற்றும் உதவும் கரங்கள் என்ற அமைப்பு சார்பாக ஆரிபா குடும்பத்தார்க்கு நன்றி தெரிவித்து பிரசுரம் வெளியிட பட்டது.



தகவல் - .நஜிப் -
செய்திகள் தொகுத்தவர் - ஆதம்.ஆரிபின்


,

Tuesday, May 20, 2008

தோப்புத்துறை மர்கஸ் நிர்வாகிகள் சந்திப்பு

துபாயில் ஜாக் தலைமை நிலைய நிர்வாகிகளுடன் தோப்புத்துறை மர்கஸ் நிர்வாகிகள் சந்திப்பு - புகைப்படங்கள்









ஜாக் தலைவர் எஸ்.கே.கமாலுதீன் மதனி'யுடன் தோப்புத்துறை மர்கஸ் நிருவாகிகள் ஹஜாதீன் , அப்துல் அஜீஸ் ,ஜெகபர் அலி மற்றும் உறுப்பினர்கள் .



கூட்டத்தில் தோப்புத்துறை மர்கஸ் அமீர் அப்துல் அஜீஸ் பேசியபோது...




அரபு அமீரக ஜாக் அமீர் ஷைகு . இக்பால் மதனியுடன் தோப்புத்துறை மர்கஸ் நிருவாகிகள்




கூட்டத்தில் தோப்புத்துறை மர்கஸ் நிருவாகிகள்

Monday, May 19, 2008

ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்

'ஜாக்' என்று தமிழ் பேசும் மக்களிடம் சுருக்கமாக அறிமுகமாகி இருக்கும் "ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்" என்ற அமைப்புதுவங்கப்பட்டு இருபது ஆண்டுகளாக இஸ்லாமிய மார்க்கத்தைஅதன் தூய வடிவில் ஜாதி பேதமின்றி அனைத்து மக்களுக்கும்அறிமுகபடுத்திக் கொண்டும் , அழைப்பு பணியிலும் கல்விபணியிலும் மற்றும் சமுக பணியிலும் அயராது பாடுபட்டுவருகிறது.


கடந்த ஒரு மாத காலமாக அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தனது அமைப்பின் கிளையை முறைப்படி ஆரம்பித்துள்ளது, அல் ஹம்துலில்லா... இதன் தொடர்ச்சியாக கடந்த 16-05-2008 வெள்ளிகிழமை அன்று துபாயில் தாயக அமீர் எஸ் .கே .கமாலுதீன் மதனி அவர்கள் தலைமையில் அமீரக செயற்குழு கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் ஒட்டு மொத்த அமீரக நிர்வாகம் தேர்ந்தெடுக்க பட்டது,

தேர்வு செய்யப்பட்டவர்கள் விபரம்

இன்சா அல்லாஹ்... அல் ஜன்னத் மாத இதழில் விரைவில் வெளிவரும்...

"ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்"

குர்ஆன் சுன்னாவை அடிப்படையாகக் கொண்ட தமிழகத்தின் முதன்மையான தவ்ஹீத் அமைப்பு

இந்த அமைப்பு - குழம்பிய குட்டை அல்ல...
சமுத்திரம்... மாபெரும் சமுத்திரம்...

ஆர்ப்பரிக்கும் அலைகள் இல்லாத அமைதியான சமுத்திரம்...

ஆள் பலம் காட்டி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கம் அல்ல..
இஸ்லாமிய பணி செய்து இறைவனின் அன்பை பெறுவதே நோக்கம்...
காகித பூக்கள் மீது வாசனை தெளித்து, வார்த்தை ஜாலங்களால்...இஸ்லாத்தின் பெயர்கூறி வியாபாரம் செய்வதல்ல நோக்கம்...

இஸ்லாமிய கோட்பாடுகளை, அதன் தூய வடிவில் இவ்வுலகிற்கு உணர்த்துவதே நோக்கம்...

தமிழகம் முழுவதும் எழுபதுக்கும் மேற்ப்பட்ட மர்கஸ்கள், கல்வி நிறுவனங்கள்,அனாதை இல்லம் என்று நிருவாகிக்கும் தனித்தன்மை...

இவைகள் அனைத்தும் பெரும் புகழ் பெறுவதற்க்கில்லை...

இவைகளை காட்டி லாபம் அடைய பணம் வசூலிப்பதற்காக நடத்தபடுபவை இல்லை...
புனிதமான நோக்கம், அது இறைவனின் அன்பை பெறுவதே...


சகோதரர்களே... ஜாக் அமைப்பில் இணையுங்கள்...தன்னலமற்ற ஒரு சேவைக்கு தயார் ஆகுங்கள்...

அன்புடன்
தோப்புத்துறை - ஹாஜாதீன்




Sunday, May 18, 2008

அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்.....)

இன்சா அல்லாஹ்...
23-05-2008 வெள்ளிக்கிழமை அன்று மாலை அசர் தொழுகைக்கு பிறகு
அஜ்மான் எல்லையில், சார்ஜா எப்ப்கோ பெட்ரோல் பங்க் அருகில்
"ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் "யின்
அமீரக ஆலோசனை கூட்டம்
நடைபெற உள்ளது,

அதுசமயம் தாயக அமீர் கமாலுதீன் மதனி , அமீரக ஜாக் தலைவர் இக்பால் மதனி மற்றும் தலைமை நிலைய நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள், நிருவாகிகள் அனைவரும் கலந்து கொள்வீர்...

மேலதிக தகவல்களுக்கு...

நூருல் அமீன்,கைபேசி : 055 - 5563733

"ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் - அமீரகம் கிளை "



அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்.....)

நேற்று 16-05-2008 வெள்ளிக்கிழமை அன்று மாலை அசர் தொழுகைக்கு பிறகு துபாய் நைப் பார்க் அருகில் மலபார் சூப்பர்மார்க்கெட் எதிரில் மினி பவனில்
"ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் - அமீரகம் கிளை "யின்
அமீரக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.



இக்கூட்டததில் தாயகத்திலிருந்து அமீரகத்திற்கு வருகை தந்திருக்கும் "ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்" அமைப்பின் அமீர் கமாலுதீன் மதனி மற்றும் தலைமை நிலைய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இந்நிகழச்சியில் அமீரக "ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்" அமைப்பின் அமீரக நிர்வாகிகள் தோந்தெடுக்கப்பட்டார்கள்.


செய்திகள் : JAQH அமீரகம்