Friday, July 17, 2009

ஏழை மக்களின் துயர்துடைக்கும் நற்பணியில் பங்கெடுக்க வாருங்கள்.

ஏழை மக்களின் துயர்துடைக்கும்

நற்பணியில் பங்கெடுக்க வாருங்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

தோப்புத்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார கிரமாங்களில் அடிப்படை வசதிக்கு கூட வழியில்லாத ஏழை எளியவர்களுக்கு உதவும் விதமாகமாகவும் அவர்களின் கஷ்ட, நஷ்டங்களில் பங்கெடுத்து அதை நிவர்த்தி செய்யும் விதமாக தர்மம் என்ற பெயரால் வீட்டுவாசல்களில் நாளுக்கு நாள் மிஸ்கீன்கள் பெருகிவரும் அவல நிலையை போக்கும் விதமாகவும், ஒரு அமைப்பு செயல்பட வேண்டும் என்பது நமதூர் மக்களின் எண்ணமாக இருந்து வந்தது.

இந்த உன்னத எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் விதமாக கடந்த 13.08.2005 சனிக்கிழமை அன்று மஸ்ஜிதுல் முஸ்லிமீன் வளாகத்தில் வைத்து அலோசனை செய்யப்பட்டு “அல் பத்தாஹ் உதவும் அமைப்பு” (பைத்துல்மால்) என்ற பெயரில் ஓர் அமைப்பு அல்லஹ் மாபெறும் கிருபையால் துவங்கப்பட்டது. ( அல் ஹம்துலில்லாஹ் )

அமைப்பின் முக்கிய குறிக்கோள்கள் :

  • ஏழை,எளியவர்கள் (யாசிப்போர்கள்) இவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக தர்மங்களை முறைப்படுத்துதல்.
  • வட்டி கொடுமைகளிலிருந்து சமுதாயத்தை பாதுகாத்தல்.
  • இயற்கை சீற்றம் மற்றும் பேரழிவுகளினால் பாதிக்கப் பட்டோருக்கு மத,இன பேதமின்றி உதவிக்கரம் நீட்டுதல்.
  • ஏழைகளின் ஜனாஸா செலவுக்கு உதவி செய்தல்.
  • ஏழை,எளிய சிறுவர்களின் கத்னா( சுன்னத்) செலவுக்கு உதவுதல்.
  • ஏழை,எளிய மாணவர்களின் உலக மற்றும் மார்க்க கல்விக்கு உதவி செய்தல்.
  • விதவைகள் மற்றும் கைவிடப்பட்டோர்களுக்கு அடிப்படை தேவைக்காக சிறிய தொகையை மாதம்தோறும் அளித்தல்.
  • ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு உணவு வகைக்கு உதவிச் செய்தல்.
  • வசதியற்றவர்களின் பழுது அடைந்த கூரை வீடுகளை செப்பனிடுதல்.
  • மருத்துவ முகாம் அமைத்து ஏழை,எளியவர்களுக்கு இலவச மருத்துவம் செய்தல்.
  • இரத்ததான முகாம் அமைத்து அவசர நிலைக்கு உதவி செய்தல்.
  • பிரயாணத்தில் உடைமைகளை இழந்து பரிதவிப்பவருக்கு பிரயாண செலவுக்கு உதவி செய்தல்.

இவ்வாறான உன்னத உயரிய குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு அமைப்பு துவங்கபட்டது, துவங்கப்பட்ட நாள்முதல் பல சேவைகளை செய்து வருகிறது.

ஏழை மக்களின் துயர்துடைக்கும் இ ந் நற்பணியில் பங்கெடுக்க வாருங்கள்.

———————————————————————————————-

அல் பத்தாஹ் உதவும் அமைப்பு ( பைத்துல்மால் )
மஸ்ஜிதுல் முஸ்லிமீன் வளாகம்,
109/1,மர்க்கஸ் தெரு,தேத்தாகுடி தெற்கு,
தோப்புத்துறை, நாகை மாவட்டம்
போன்: 04369 316155,99947 60816

அமீரகத்தில் தொடர்புக்கு…

+971 50 8813666, +971 50 5504525

————————————————————————————————

Friday, July 3, 2009

தோப்புத்துறையில் இஸ்லாமிய மார்க்கத்தை சீரழிக்கும் கந்தூரி விழா

நாகை மாவட்டம், தோப்புத்துறையில் இஸ்லாமிய மார்க்கத்தை சீரழிக்கும்
கந்தூரி விழா
தோப்புத்துறையில் கடந்த இரண்டு ( 2,3 ஜூலை) நாட்காளாக இஸ்லாமிய மார்க்கத்திற்கு சவால் விடும் பொருட்டு வெகு ஜோராக கந்தூரி விழா நடந்தது, சந்தனக் கூட்டுக்கு முதல் நாளான 2 ஆம் தேதி மாபெரும் இன்னிசையுடன் நடன நிகழ்ச்சி நடந்தது, அதில் ஆண்களும்,பெண்களும் மற்றும் சமாதி வழிபாட்டுக்காரர்களும் திரளனோர் கண்டுகளித்தனர், பெண்களுக்கான பகுதியில் சில வெளியூர் ஆண்களும் நின்றதால் சிறு கைகலப்பு நடந்தது,அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் சந்தனக் கூடு நிகழ்ச்சியும் ஆண்களும் பெண்களும் கலந்துக் கொண்டனர்,ஏகத்துவம் எழுச்சி அடைந்த காலத்திலும் இஸ்லாத்திற்கே சவால் விடும் அளவிற்கு நடந்தது குறிப்பிடத்தக்கது,இதுக்குறித்து பின்வரும் கட்டுரையை வாசித்து வரக் கூடிய காலங்களில் இந்த மாதிரியான மாபெரும் தீங்குகளிருந்து நம் குடும்பத்தை காப்பற்ற முயற்சி செய்வொம்,இறைவன் நம்மை காப்பற்றுவனாக…


- ஆதம்.ஆரிபின்

சந்தனக் கூடும் – சமாதி வழிபாடும்

நபிமார்களுக்குப் பிறகு அவர்களின் சீரிய தெண்டுகளை அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின நேசர்கள் செய்தார்கள். அறியாமை இருளில் மூழ்கிக் கிடற்த சமுதாயத்தைத் தட்டி எழுப்பினார்கள். இவர்களின் உயரிய போதனைகளால் உறங்கிக் கிடந்த சமுதாயம் உணர்வு பெற்றது. இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் எழுச்சி பெற்றனர். ஏராளமானோர் நேர் வழி பெற்றனர்.அதற்காக அவ்லியாக்கள் என்னும் அந்த இறை நேசச் செல்வர்களை நாம் போற்ற வேண்டும். கண்ணியப் படுத்த வேண்டும்.
அவர்களைப் போற்றுவது கண்ணியப்படுத்துவது என்பதெல்லாம், அவர்கள் வாழ்ந்த முறைப்படி நாமும் வாழ்வதும், அவர்கள் பேணி நடந்த நபி வழியை நாமும் பேணி நடப்பதும் தான்.அதை விட்டு விட்டு அவர்களின் கப்ருகளின் மீது கட்டடம் கட்டி, கந்தூரி என்ற பெயரில் ஆண்டு தோறும் கல்லறைகளுக்கு விழா எடுப்பதும், அர்ச்சனையும் ஆராதனையும் செய்வதும், நேர்ச்சை என்ற பெயரில் சமாதிகளை நாடிச் சென்று முடி எடுப்பதும், காணிக்கை செலுத்துவதும், உரூஸ் என்ற பெயரில் பாட்டுக் கச்சேரியும் பரத்தையர் நாட்டியமும் நடத்தி கண்டு களிப்பதும், சந்தனக் கூடு என்ற பெயரில் சமாதிகளுக்கு சந்தனத்தில் அபிஷேகம் செய்வதும், இவைகள் யாவுமே அந்த இறை நேசர்களை கேவலப் படுத்தும் செயல்களே தவிர கண்ணியப்படுத்தும் செயல்கள் அல்ல.
‘எனது கப்ரைத் திரு விழா நடத்தும் இடமாக ஆக்கி விடாதீர்கள்’ என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
(அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி) ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத்)
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலத்திலேயே விழா நடத்துவது கூடாது என்றிருக்க -அவ்லியாக்களின் கப்ருகளில் ஆண்டு தோறும் விழா நடத்துவது எவ்வளவு பெரிய பாவம் என்பதை உணர வேண்டும்.
அவ்லியாக்களின் சமாதிகளுக்குப் பூமாலை போடுவதும், போர்வை வாங்கிப் போர்த்துவதும், உண்டியலில் காணிக்கை போடுவதும், பாவச் செயல்களில் உள்ளவை.பூமாலையாலும் போர்வையாலும் அந்தப் புனிதர்களுக்கு என்ன பிரயோஜனம்? உண்டியலில் போடும் காணிக்கையால் அந்த உத்தமர்களுக்கு என்ன பயன்? இறை நேசர்கள் பெயரால் இடைத் தரகர்கள் அல்லவா கொள்ளை அடிக்கிறார்கள்?
யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக. அவர்கள் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்களாக்கி விட்டனர். அறிவிப்பவர்: அபூஹூiரா(ரலி) ஆதாரம் : முஸ்லிம்)
நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்கள் ஆக்கி விட்டவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்திருக்க, அவ்லியாக்களின் கப்ருகளை வணங்குமிடமாக ஆக்குவது எவ்வளவு பெரிய பாவம்?
பெண்கள் கப்ருஸ்தான்களுக்குச் செல்வதை பெருமானார் (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டிக்கிறார்கள். தர்காக்களுக்குப் பெண்கள் அறவே செல்லக் கூடாது.ஏனெனில் தர்காக்களும் கப்ருஸ்தான்கள் தான்.
கப்ருகளை ஸியாரத் செய்யும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தனர். (அறிவிப்பவர்: அபூ ஹூரைரா(ரலி) ஆதாரம்: அஹ்மத், திர்மிதி)

தர்காக்களுக்குச் செல்லும் பெண்கள் சபிக்கப் பட்டவர்கள். தம் குடும்பப் பெண்களை தர்காக்களுக்கு அழைத்துச் செல்லும் ஆண்கள் மாபெரும் குற்றவாளிகள் என்பதில் சந்தேகமில்லை.

கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப்போகட்டும்-

என்னும் நூலிலிருந்து…

Wednesday, May 27, 2009

நாகை மாவட்டம் – தோப்புத்துறை-யில் மதரஸா மாணவ மாணவியர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி

நாகை மாவட்டம் – தோப்புத்துறை-யில்

மதரஸா மாணவ மாணவியர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி

இடம் : மர்க்கஸ் தெரு, தோப்புத்துறை

நாள் : 30 – 05 – 2009, சனிக்கிழமை,

( இன்ஸா அல்லாஹ்) மக்ரிப் தொழுகைக்கு பிறகு,

கிராஆத் : எஸ்.நுர் முஹம்மது அவர்கள்

முன்னிலை :

எம்.அவுலியா முஹம்மது,அவர்கள்,

துணைத் தலைவர்,ஜே.யூ.கியூ.எச்.

எச்.எ.சேக் அப்துல் காதர்,அவர்கள்,

சிங்கை பிரதிநிதி.

எம்.ஜாஹீர் உசேன்,அவர்கள்,

துபாய் பிரதிநிதி.

எஸ்.எம்.பாரி,அவர்கள்,

துபாய் பிரதிநிதி.

எஸ்.சபீர் அஹமத்,அவர்கள்,

பொருளாளர்,ஜே.யூ.கியூ.எச்

எச்.சேக் தாவுத்,அவர்கள்,

செயலாளர்,ஜே.யூ.கியூ.எச்

ஒய்.முஹம்மது ஆரிப்,அவர்கள்,

துணை செயலாளர்,ஜே.யூ.கியூ.எச்

தலைமை :

எ.அஹமது ரபீக்,அவர்கள்,

தலைவர்,ஜே.யூ.கியூ.எச்

வரவேற்புரை :

பி.எஸ்.ராவுத்தர்ஷா,அவர்கள்,

மூத்த உறுப்பினர்,ஜே.யூ.கியூ.எச்

சிறப்புரை :

மௌலவி அப்சலுல் உலமா

முஹம்மது இஸ்மாயில் நூரி, அவர்கள்,

இமாம் – மஸ்ஜிதுல் முஸ்லிமீன்.

நன்றியுரை :

ஆதம்.ஆரிபின்

குறிப்பு :

  • இன்ஷா அல்லாஹ், குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறும்,
  • மதரஸா மாணவ மாணவியர்கள் நிகழ்ச்சி நடைபெறும்,
  • அஸ்ஸாலிஹாத் பெண்கள் அரபி கல்லூரி மணவிகளுக்கு
  • கோடைக்கால பயிற்சி வகுப்பில் கலந்துக் கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல்

அனைவரும் தவறாது கலந்துக் கொண்டு

பயன் பெருமாறு கேட்டுக் கொள்கிறொம்.

———————————————————

மஸ்ஜிதுல் முஸ்லிமீன் (மர்க்கஸ்)

அஸ்ஸாலிஹாத் பெண்கள் அரபிக் கல்லூரி

அல்ஃபத்தாஹ் பைத்துல் மால் ( உதவும் அமைப்பு )

ஜம்யிய்யத்து அஹ்லில் குர்-ஆன் வல் ஹதிஸ் (J.A.Q.H)

மர்க்கஸ் தெரு, தோப்புத்துறை,நாகை மாவட்டம்

Thursday, May 14, 2009

நாடாளுமன்ற தேர்தல் தோப்புத்துறை ( நாகை மாவட்டம் ) ஓர் பார்வை

தேர்தல் சிறப்பு செய்திகள் : நாடாளுமன்ற தேர்தல்

தோப்புத்துறை ( நாகை மாவட்டம் ) ஓர் பார்வை



நாடாளுமன்ற தேர்தல் :
தோப்புத்துறை ( நாகை மாவட்டம் ) ஓர் பார்வை

நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் ஏழு வெட்பாளர்கள் களத்தில் உள்ளனர், அதில் திமுக வுக்கும் கம்யூஸ்ட் கட்சிக்கு கடும் போட்டி நடைபெற்றது,தொப்புத்துறை யில் ஆரம்பத்தில் திமுக-விற்கு ஆதரவு அலை வீசியது,வாக்கு பதிவுக்கு முதல் நாளான நேற்று திடிரென தமுமுக அமைப்பை சார்ந்தவர்கள் கம்யூஸ்ட்டுக்கு ஆதரவக களத்தில் இறங்கினர்,இதனால் தோப்புத்துறை மக்களின் திமுக ஓட்டுக்கள் பெரிதும் பதிக்கப்பட்டது என்பது மறுக்க இயாலாது,

மேலும் திமுகவினருக்கு இது பெரும் அதிர்ச்சியை கொடுத்தது, சென்னை யில் நடந்த த.மு.மு.க வினருக்கு எதிரான தாக்குதல் பற்றி கேள்விப் பட்டதும் மும்முரமாக திமுகவுக்கு எதிராக களமிரங்கினார்கள்,இதற்கிடைய திமுக கூட்டணி கட்சிக்கும் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கும் ஹத்திப் தெரு வில் சிறு சலசலப்பு நடந்தது போலிசார் தலையிட்டு சமாதனப் படுத்தினர்,மதியத்திற்கு பிறகு தானாமூனா பள்ளி வாக்குசாவடி அருகே இருகட்சிகிடையே கை கலப்பு நடந்தது போலிஸ் தடியடி நடத்தியதால் கூட்டம் கலைந்து சென்றது, இந்த வாக்கு சாவடி மட்டும் சற்று பதட்டமாக காணப்பட்டது.

முழுக்க முழுக்க தோப்புத்துறை வாக்குகள் திமுகவிற்கே என்ற நிலை மாறி திடிரென த.மு.மு.க வினர் களம் இறங்கியதால் சற்று ஆட்டம் கண்டது உண்மையே.

தோப்புத்துறை-யிலிருந்து ஆதம்.ஆரிபின்

Wednesday, May 13, 2009

தமிழகத்தில் எங்கிருந்தும் காவல் துறைக்கு புகார் தெரிவிக்க!

தமிழகத்தில் எங்கிருந்தும் புகார் தெரிவிக்க!
தானியங்கி கம்ப்யூட்டர்-தொலைபேசி சேவை
போலீஸ் டி.ஜி.பி அலுவலகத்தில் அறிமுகம்


சென்னை மைலாப்பூரில் உள்ள தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் நாள் முழுவதும் இயங்கும் தானியங்கி கணிணி வழி-தொலைபேசி மூலம் பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை பதிவு செய்யும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தமிழ்நாட்டின் எந்தப்பகுதிகளில் இருந்தும், எந்த நேரத்திலும் தங்களது புகார்கள் மற்றும் குறைகளை தெரிவிக்க இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். தமிழ்நாடு தவிர இதர மாநிலத்தில் உள்ள பொதுமக்களும் கூட இச்சேவையை பயன்படுத்தி உதவி கோரலாம்.

பொதுமக்கள் தங்களது புகார் மற்றும் குறைகளை பதிவு செய்ய கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். அத்தகைய புகார்கள் அல்லது குறைகள் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படுவதுடன் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரிக்கும் தக்க அறிவுரை வழங்கப்படும்.

பி.எஸ்.என்.எல். தொலைபேசி- 044 28447200
டாடா இண்டிகாம் தொலைபேசி- 044 64555100, 64556100

(நேரடி அவசர உதவி தேவைப்படுவோர் எப்போதும் போல் 100 என்ற தொலைபேசியையும் பயன்படுத்தலாம்)
மேற்கண்ட தகவலை டி.ஜி.பி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அன்புடன்,
தாருல்ஸஃபாவிலிருந்து சாதிக்.

Thursday, May 7, 2009

சைனீஸ் அக்குபஞ்சர் மருத்துவம்


மனித உடலின் மின்காந்தத் திறனை
சீர்ப்படுத்தும் சைனீஸ் அக்குபஞ்சர் மருத்துவம்


அஸ்ஸலாமு அலைக்கும்.

தகவல் தொழில் நுட்பத் துறையில் பல மணி நேரம் உட்கார்ந்தபடியே கணினியில் பணி செய்யும் இளைஞர் களுக்கு உடலில் உள்ள மூட்டுகளில் வரும் வலியால் அதிகம் பாதிக்கப்படுகின் றனர். இந்த வலியை போக்குவதற்கு சைனீஸ் அக்குபஞ்சர் மருத்துவப்படி உடலில் மின் காந்த திறனை சீர்ப்படுத்துவது குறித்து சைனீஸ் அக்கு பஞ்சர் மருத்துவ நிபுணர் டாக்டர் மு.சாதிக் தெளிவாக எடுத்துக் கூறுகிறார்.

இன்றைய நவீன உலகத் தில் எந்த ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு தகவல் தொடர்பு தொழில் நுட்ப வளர்ச்சியால், தொடர்பு கொண்டு கல்வி, மருத்துவம், வர்த்தகம், தொழில் நுட்பப் பரிமாற்றங் கள் உடனுக்குடன் பெற்று பல்வேறு துறைகளில் அதிகளவில் வளர்ச்சி பெற்று வருகிறோம்.

குறிப்பாக அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் தகவல் தொழில் நுட்ப துறையில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது. படித்த இளைஞர்கள் உட னுக்குடன் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

தகவல் தொழில் நுட்பத் துறையில் மிக முக்கிய பங்கு வகிப்பது கணினி, இணைய தளத்தின்மூலம் தகவல் பரி மாற்றங்கள் உலகம் முழுவதும் தொடர்பு கொண்டு பெறுவதுதான். இப்பணியில் இரவு - பகலாக பல மணி நேரங்கள் ஆண் - பெண் இருபாலரும் அமர்ந்த இடத்திலே பணி செய்யும் நிலையில் உள்ளனர்.

இதன் மூலம் நல்ல வருமானம் கிடைத்தாலும், சில ஆண்டுகளுக்கு பிறகு ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்வதால் இளம் வயதிலேயே உடலில் எங்கெல்லாம் மூட்டுகள் உள்ளதோ அங்கெல்லாம் வலி ஏற்பட்டு தொடர்ந்து பணி செய்ய முடியாத நிலை உருவாகிறது.

இம்மூட்டு வலி நோய்க்கு ஆங்கிலம் மருத்துவம் இருந்தாலும், எளிமையான இயற்கை மருத்துவமான சைனீஸ் அக்குபஞ்சர் சிகிற்சை முறையில் விரைவில் மூட்டு வலியைப் போக்குவதுடன், மேற்கொண்டு வராமல் தடுப்பதற்கான உடலில் மெலிந்த ஊசிகளை செலுத்தி சிகிச்சை அளிப்பதன் மூலம் உடலில் மின்காந்த சக்தியினை சீர்படுத்தி நோய் அகற்றப் படுவதால் நிரந்தரத் தீர்வு ஏற்படுகிறது.

இம்மருத்துவத்தில் முழு மையான நாடி பரிசோதனை, சைனீஸ் மருந்துகள், ஆஸ் டியோ அக்குபஞ்சர், எளிய முறையில் உடற்பயிற்சி போன்றவைகள் மேற்கொள்ளப்படு வதன் மூலம் கணினித் துறையில் பணி செய்பவர் களுக்கு வரும் மூட்டு வலிகள் நிரந்தரமாகப் போக்கப்படு கிறது.

மற்றும் உடலின் நோய் எதிர்ப்புசக்தி குறையும்போது பலவித நோய்களும் நமது உடலை எளிதில் தாக்கி பாதிப்ப்பிற்குள்ளாக்க்குகிறது. இந்த நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் சமநிலையில் வைத்திருக்கும்போது எந்த அலர்ஜியோ, எளிதில் வரும் சளி, இருமல் போன்ற நோயோ வர வாய்ப்பேயில்லை. ஆரோக்கியமாக வாழலாம்.


ஸோரியாஸிஸ், எயிட்ஸ், ஆஸ்துமா, கேன்ஸர், பெண்களுக்கான கற்பப்பை பிரச்சினைகள் உட்பட, சிறுநீரகம் பாதித்தவர்கள் போன்ற அனைத்து நோய்களையும் மிக அற்புதமாகக் குணப்படுத்தலாம் இன்ஷா அல்லாஹ். கற்பப்பையை அகற்ற அனுமதிக்காதீர்கள், அதனால் உங்களது உடலுக்கு மேலும் பற்பல தொந்தரவுகளைத் (தூக்கமின்மை, கை கால் வலி, இடுப்பு வலி etc.) தந்து கொண்டே இருக்கும் பிற்காலத்தில். ஆங்கில மருத்துவத்தில் அதற்கு தீர்வு இல்லாததால், கற்பப்பையை அகற்றக் கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறு. அதை முழுமையாகக் குணப்படுத்தலாம் அக்குபஞ்சர் மருத்துவம் மூலம் இன்ஷா அல்லாஹ்.


மேற்கொண்டு விபரத்திற்கு:

மருத்துவர் சாதிக் - 09443389935 - நாகர்கோவில்.

Monday, May 4, 2009

நோயில்லா உலகம் படைப்போம்

நோயில்லா உலகம் படைப்போம்
வழி காட்டும் சீன மருத்துவம்

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்று நம்மில் பல்வேறு நபர்கள் நோயினால் அவதிப்பட்டு, ஆங்கில மருந்துகளின் பின்விளைவுகளாலும் மற்றும் அதற்கு சிகிற்சை அளிக்க போதிய வருமானமில்லாது இறந்து போகும் நிலமையையும் நாள்தோறும் கண்டுவருகிறோம்.

இதற்கெல்லாம் விடைகொடுக்கும் விதமாக, எளிமையான எந்த பக்க விளைவுகளுமின்றி நாடி முறைப்படி நோயறிந்து அதற்கு தகுந்த முறையில் அக்குபஞ்சர் சிகிற்சை அளித்து பூரண குணப்படுத்தி வருகிறோம். நோயாளிக் கூறாமலேயே அவர்களது உடலில் உள்ள நோய்களை பட்டியலிட்டு கூற இயலும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிறப்புக் கருவியின்மூலம். பின் கண்டறியப்பட்ட நோய்களுக்குத் தகுந்த முறையில் சிகிற்சையும் அளிக்கிறோம்.

ஒருவரது உணவுப்பழக்கமும், உடல்பயிற்சியும், நல்ல தூக்கமும் நல்ல ஆரோக்கியத்திற்கு அடிப்படை. ஐவேளை தொழும்பொழுது மனதை ஒருமுகப்படுத்தி கட்டுபடுத்தவும் முடியும். சரியான வேளையில் தொழுகையை நடத்த கூறுவதுபோல், சரியான வேளையில் உணவையும் உட்கொள்ளவேண்டும். அப்போது நாம் சந்திக்கும் பற்பல நோய்களிலிருந்தும், விடுபடலாம் இன்ஷா அல்லாஹ். இது மிகவும் இன்றியமையாதது.

மேலும் அதிக விபரத்திற்கு அல்லது அக்குபஞ்சர் சிகிற்சைக்கு தொடர்பு கொள்ளவும் >
  • மருத்துவர் சாதிக் > 09443389935
  • "தாருல்ஸஃபா அக்குபஞ்சர் சிகிற்சை நிலையம்" > நாகர்கோவில்.

சிகிற்சையின் போது தகுந்த ஆலோசனைகளும் அளிக்கப்படும். அப்போது மீண்டும் நோய் வருவதிலிருந்து உங்களைப்பேணி பாதுகாத்துக் கொள்ளலாம். BP, Diabetics-ற்கு தொடர்ந்து மருந்து சாப்பிடத் தேவையில்லை. இம்மருத்துவம் செய்வதன்மூலம் முழுமையாக அந்த மாத்திரைகளை நிறுத்தி சிறந்த உடல்நலத்தோடு வாழலாம். BP மற்றும் Diabetics-ற்கு தொடர்ந்து மாத்திரை சாப்பிடுவதன்மூலம் இறுதியில் சிறுநீரகத்தை இழக்க நேரிடும் என்பதையும் மறவாதீர்கள்.

உங்களது இடத்தில் ஒருநாள் இலவச அக்குபஞ்சர் விழிப்புணர்வு முகாம் நடத்தவும் மேற்குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டு தேதியைப் பெற்றுக்கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ். எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எங்களது ஆவல்; நோயற்ற உலகம் படைப்போம் இன்ஷா அல்லாஹ்.

குறிப்பு: அனாதைகளுக்கும், ஆதரவற்ற வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஏழைகளுக்கும் இலவசமாக சிகிற்சை அளிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.

அன்புடன்,
தாருல்ஸஃபாவிலிருந்து மருத்துவர் சாதிக்.
Mobile: 09443389935.

Tuesday, April 7, 2009

வெற்றியை நோக்கி விரைந்து வாருங்கள்!!!

அல்லாஹ்வின் திருபெயரால்...

வெற்றியை நோக்கி விரைந்து வாருங்கள்!!!


மாபெரும் இசுலாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

இடம் : ஹத்திப் தெரு சந்திப்பு,

தோப்புத்துறை, நாகை மாவட்டம்

நாள்: 11 - 04 - 20009, சனிக்கிழமை,

நேரம் : மாலை 6.30 மணியளவில்

சிறப்புரையளர்கள் :
மவுலவி. எம்.முஹம்மது யூசுப் மிசுபாயி,
தொண்டி கலந்தர் அபூபக்கர் யூசுபி,
மற்றும்
அப்சலுல் உலமா முஹம்மது இசுமாயில் நூரி,

இன்சா அல்லாஹ்...
மாலை 6.30 முதல் இஷா வரை
மதரசா மாணவ,மாணவியவர் நிகழ்ச்சி
நடைப்பெறும்

மேலும் விபரங்களுக்கு...
ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்

தோப்புத்துறை- Mobile : 9994760816 / 9003329412

Monday, March 23, 2009

" மாபெறும் இஸ்லாமிய ஏகத்துவ எழுச்சி பொதுக்கூட்டம் "

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்!


"அல்லாஹ்வையன்றி எந்தத் தீமையையோ, நன்மையையோ செய்ய அதிகாரம் இல்லாதவற்றையும் நீங்கள் வணங்குகிறீர்களா?" (5:76)


இறைவன் நாடினால்... அடுத்த மாதம் ( April ) நாகப்பட்டினம் மாவட்டம்தோப்புத்துறை- யில் " மாபெறும் இஸ்லாமிய ஏகத்துவ எழுச்சி பொதுக்கூட்டம் " நடைபெற இருக்கிறது, அது சமயம் பல மார்க்க அறிஞர்கள் உரை நிகழ்த்தஉள்ளனர், அதற்கு தங்களால் ஆனா பொருளாதார உதவியை அளிக்குமாறுகேட்டுக் கொள்கிறோம்.



தொடர்புக்கு : +91 9894530893 / 9003329412 , அமீரகத்தில் :+ 971 50 8813666 / 050 5780539



Thursday, March 12, 2009

து ஆ' செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

து ' செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்

நாகை மாவட்டம் ,தோப்புத்துறை பெரியபள்ளிவாசல் தெரு, முடி திருத்துபவர் பாரக் அவர்களின் மகன்இப்ராகிம் ஷாஎன்ற மாணவர் சில மாதங்களாக டி.பி நோயால் அவதிக்கு உள்ளாகி, உயிருக்கு போராடி வருகிறார், அவர் பூரண குணமடைய எல்லா வல்ல அல்லாஹ்விடம்து செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.
- mannadykaka.com

து ஆ' செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

து ' செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்

நாகை மாவட்டம் ,தோப்புத்துறை பெரியபள்ளிவாசல் தெரு, முடி திருத்துபவர் பாரக் அவர்களின் மகன்இப்ராகிம் ஷாஎன்ற மாணவர் சில மாதங்களாக டி.பி நோயால் அவதிக்கு உள்ளாகி, உயிருக்கு போராடி வருகிறார், அவர் பூரண குணமடைய எல்லா வல்ல அல்லாஹ்விடம்து செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.
- mannadykaka.com

Monday, March 9, 2009

இன்சா அல்லாஹ், நமது சமுதய மாணவர்களுக்கு...



இன்சா அல்லாஹ், நமது சமுதய மாணவர்களுக்கு கல்வி, மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு வழிகாட்டும் பொருட்டு விரைவில் ஒரு அமைப்பு ஒன்றை ஏற்படுத்த சில மாணவர்கள் முன்வந்துள்ளார்கள், இந்த அமைப்பின் நோக்கம் விரைவில் வெளியாகும்,இதில் ஆர்வம் உள்ளவர்கள் தமது விருப்பத்தையும், ஆலோசனைகளையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
--
சமுதாயம் செய்திகளுக்கு...
வேகமாக வளர்ந்து வரும் மண்ணடிகாகா.காம் வலைப்பதிவு
www.mannadykaka.com

Saturday, March 7, 2009

முத்துகமலம்.காம் - இணையத்தளத்தில் நமது சமுதாயம் இணையம்

முத்துகமலம்.காம் - இணையத்தளத்தில் நமது சமுதாயம் இணையம்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

சமுதாயம்

இந்த வலைப்பூவில் இசுலாமியக் கருத்துக்களை வலியுறுத்தும் பல தகவல்கள் இடம் பெற்றிருக்கிறது.

http://samuthayam.blogspot.com


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

தோப்புத்துறை ஈமெயில் வாசகர்களுக்கு...


தோப்புத்துறை ஈமெயில் வாசகர்களுக்கு...
கீழே உள்ள செய்தி உறுதி செய்ய பட்ட செய்திகளாகும்,மேலும் இது மாதரியான செய்திகள் தாங்களுக்கு தேவையில்லை என்றால் எனக்கு மெயில் செய்யவும், அதை விட்டு இது மதியான செய்திகளை அரசியல் செய்ய வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன், எப்படியேனும் இது மாதிரியான செய்திகள் நாலு இடத்தில் நாலு மாதியாக பேச கூடும், அதனால் தான் அதனை பார்வர்ட் செய்தேன், இது யாரையும் எந்த கூட்டமைப்பையோ அல்லது தனிப்பட்ட ஒருவரிவோ புண்படுத்தவோ மற்றும் கலங்கபடுதுவது எனது நோக்கமல்ல, இது மாதிரி ஈமெயில் இன்சா அல்லா AVOID செய்யப்படும் , பயன்பட கூடிய செய்திகள் இருந்தால் MANNADYKAKA. காம் அல்லது எனது இமெயில் -க்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
<<--- தோப்புத்துரை ஜமாத் மன்றம்- ஊழல் புகார்
------------------------------
------------------------------------------

சில தினம் முன்பு ஜமாத் சார்பாக கடந்த 3 ஆண்டுகளுக்கான வரவு- செலவு பிரதி வெளியிட பட்டது, அதில் நிறைய குளருபடிகள் நடந்துள்ளது, கிட்டதட்ட 1 லட்சம் மேல் அபேஷ் ஆகி உள்ளது, விரைவில் செய்திகள் வெளியாகும்.

-->>

Tuesday, January 13, 2009

ஐக்கிய அரபு அமீரகம் - ரச அல் கைமா வில் முஸ்லீம் முன்னேற்ற கழகம்ஆலோசனை கூட்டம்.

ஐக்கிய அரபு அமீரகம் - ரச அல் கைமா வில் முஸ்லீம் முன்னேற்ற கழகம்ஆலோசனை கூட்டம்.

ரச அல் கைமாவில் 15-01-2009 வியாழன் இரவு 9.30 மணி அளவில் மு.மு. கிளை மற்றும் ரச அல் கைமா மண்டல பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது, அது சமயம் .மு.மு. வின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி பற்றியும் , அரசியலின் அவசியமும், பிப்ரவரி 7 ஆம் தேதியில் சென்னை - தாம்பரத்தில் நடைபெறும் கட்சியின் முதல் மாநாட்டைபற்றியும் ஆலோசிக்கப்படும், சிறப்புரையாளராக சகோ.ஹுசைன் பாஷா மற்றும் இஸ்மாயில் ஷா மற்றும் பலர் பேச உள்ளார்கள், ஆகையால் சகோதரர்அனைவரும் கலந்து சிறப்பிக்கும் மாறு கேட்டுகொள்கிறோம்,
இவண் : முஸ்லீம் முன்னேற்ற கழகம்,RAK கிளை மற்றும் மண்டலம், ஐக்கிய அரபு அமீரகம்.


.

Sunday, January 4, 2009

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல காப்பகத்திற்கு எதிராக அவதூறு பரப்பும் அமைப்பு மீது நடவடிக்கை அரசு அதிகாரிகள் பேட்டி

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல காப்பகத்திற்கு எதிராக அவதூறு பரப்பும் அமைப்பு மீது நடவடிக்கை அரசு அதிகாரிகள் பேட்டி


சென்னை, ஜன.4-

அரசு மனநல காப்பகத்திற்கு எதிராக அவதூறு பரப்பி வரும் `பான்யன்' அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் சங்கம், நர்சுகள் சங்கம், தொழிலாளர் சம்மேளனம் ஆகியவை கேட்டுக் கொண்டுள்ளன.

இதுகுறித்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தின் இயக்குனர் டாக்டர் ஆர்.சத்யநாதன், மனநல மேம்பாட்டு ஆணையத்தின் செயலர் டாக்டர் எஸ்.நம்பி ஆகியோர் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

ஒப்பந்தம்

தெருக்களில் அனாதையாக திரியும் மனநோயாளிகளை பிடித்து கோர்ட்டு மூலம் அல்லது மாநகர போலீஸ் கமிஷனர் மூலம் அரசு மனநல காப்பகத்தில் சேர்த்து, சிகிச்சைக்குப் பிறகு அந்த மனநோயாளிகளை அவர்களது குடும்பத்தினருடன் கொண்டு போய் ஒப்படைப்பதற்காக `பான்யன்' என்ற அமைப்புடன் அரசு மனநல காப்பகம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இப்படி இந்த அமைப்பினர் கடந்த 3 ஆண்டுகளில் கொண்டு வந்து சேர்த்தவர்களில் 3-ல் ஒரு பங்கு மனநோயாளிகளைத்தான் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மற்றவர்கள் இங்கேதான் நிரந்தரமாக தங்கியுள்ளனர். இவ்வாறு தங்கியிருப்பவர்களில் 150 பேர் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

ஆயிரம் நர்சுகளுக்கு பயிற்சி

`பான்யன்' அமைப்பினர் தங்களது கடமையை சரிவர செய்யாமல் இருப்பதுடன் அரசு மனநல காப்பகத்திற்கு கெட்டபெயர் ஏற்படும் வகையிலும் நடந்து கொள்கின்றனர். தேவையில்லாமல் நிர்வாகத்தில் தலையிடுகின்றனர். அந்த அமைப்பிற்காக தனியே 2 வார்டு ஒதுக்க வேண்டும். அரசு மனநல காப்பகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் போதிய பயிற்சி அளிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

இந்த மனநல காப்பகம், மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதுடன் ஆயிரக்கணக்கான நர்சுகளுக்கும் மனநல பயிற்சி அளித்து வருகிறது. எனவே, `பான்யன்' அமைப்பினர் எங்களுக்கு பயிற்சி அளிக்கத் தேவையில்லை. இங்கு போதிய கழிப்பறை வசதியில்லை என்று கூறியிருக்கிறார்கள். 7 பேருக்கு ஒரு கழிப்பறை உள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியை ஏற்க தயாராக இருக்கிறோம். ஆனால், கெட்டபெயர் ஏற்படுத்துவதை ஏற்க முடியாது.

சட்டப்படி நடவடிக்கை

பல வழிகளில் இந்த அரசு நிறுவனத்திற்கு கெட்டபெயர் ஏற்படுத்தி வரும் `பான்யன்` அமைப்பு மீது நிர்வாக ரீதியாகவும், சட்டப்படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை, அரசு மருத்துவ சங்கம், தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம், அரசு மனநல காப்பக தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகியவை கோரியுள்ளன. எனவே, `பான்யன்' அமைப்புடன் அரசு மனநல காப்பகம் செய்து கொண்ட ஒப்பந்தம் புதுப்பிக்கப்படமாட்டாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வேலூர் அரசினர் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியின் என்எஸ்எஸ் முகாம் நிறைவு

வேலூர் அரசினர் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியின் என்எஸ்எஸ் முகாம் நிறைவு

வேலூர், ஜன. 3: வேலூர் அரசினர் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமின் நிறைவு விழா அடுக்கம்பாறையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் கோயில்களில் துப்புறவுப் பணி, தெருக்களை தூய்மைப்படுத்தும் பணி, விழிப்புணர்வு ஊர்வலம் ஆகியவற்றை நடத்திய மாணவர்களை கிராம மக்கள் பாராட்டினர்.

முகாமின் நிறைவு விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் எம்.எச். கதிஜா அசிம் சுல்தானா தலைமை தாங்கினார். பி. கெüஸ்பாஷா வரவேற்றார். ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி கோபிநாத் முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கோ.மூர்த்தி மாணவர்களுக்கு பரிசளித்து சான்றிதழ்கள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் என்எஸ்எஸ் மாவட்ட தொடர்பு அலுவலர் ஜி. சுந்தர், ஒன்றியக்குழு உறுப்பினர் ராதா திருநாவுக்கரசு மற்றும் எ.ஜி. திருமலைராஜ், இராம. முரளி, திட்ட அலுவலர் சி. வீரமணி, உதவித் திட்ட அலுவலர் ஏ.பி. மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆஷூரா தினம் பற்றிய அறிவிப்பு

ஆஷூரா தினம் பற்றிய அறிவிப்பு

இன்ஷாஅல்லாஹ் நாளை 5.1.2009 திங்கட்கிழமை ச‌ர்வ‌தேச‌ப்பிறை அடிப்ப‌டையில் தாஸுஆ தின‌மாக‌வும் ம‌றுநாள் செவ்வாய்க்கிழமை ஆஷுரா தின‌மாக‌வும் இருப்ப‌தால் அனைத்து ச‌கோத‌ர‌,ச‌கோத‌ரிக‌ளும் அல்லாஹ்வுடைய‌ தூத‌ரால் க‌டைப்பிடிக்க‌ப்ப‌ட்ட‌ நோன்பை நோற்று பாவ‌மீட்சி பெறுமாறு வேண்டுகின்றோம்