Tuesday, June 3, 2008

மேலப்பாளையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம

மேலப்பாளையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

மேலப்பாளையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மேலப்பாளையம் மேத்தமார்பாளையம் எம்.ஆர்.பி. மருத்துவ சேவை அறக்கட்டளை மற்றும் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து கண் சிகிச்சை முகாமை நடத்தின.

இதில், உஸ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் எஸ்.எஸ். ஹைதர்அலி பிஸ்பாஹி, வி.டி.எஸ்.ஏ. அப்துல் ஹமீது, வாவர் பள்ளித் தலைவர் எம். சாகுல் அமீது, துணைத் தலைவர் எஸ். பீர்முகமது கலந்து கொண்டனர்.

முகாமில் கண் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

முகாம் ஏற்பாடுகளை எம்.ஆர்.பி. மருத்துவ சேவை அறக்கட்டளைத் தலைவர் டி.எம்.கே. ஜமால், செயலர் எம்.பி. நியாஸ், பொருளாளர் எச். எம். இஸ்மாயில்கனிசெய்திருந்தனர்.

This post was submitted by முதுவை ஹிதாயத்.