Wednesday, June 4, 2008

நாகூரில் பதட்டம் - கந்துரியை எதிர்த்து ஆர்பாட்டம்


நாகூரில் வருடந்தோறும் கந்தூரி விழா நடந்து வருகிறது, இந்த விழாவில் பலவித மான அனச்சரங்களும், இஸ்லாத்திற்கு முரணான சடங்கு களும் நடந்தேறி வருகிறது, இதை கண்டிக்கும் வகையில் நேற்று சில அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தியது இதனால் அங்கு பதட்டம் நிலை ஏற்பட்டுள்ளது,

தஞ்சை மாவட்டத்தைப் பொறுத்தவரை இன்று இப்படிப்பட்ட தர்காக்கள் இல்லாத ஊர்கள் பாவம் செய்த ஊர்களாகக் கருதப்படுகின்ற அளவுக்கு இந்த தர்கா மோகம் பெருத்துக் கொண்டே போகிறது. மக்களில் மிகப் பெரும்பாலோரின் ஆதரவும் இவர்களுக்குக் கிடைத்து விடுகிறது. சாதாரணமாகப் படம் பார்க்க, பொழுது போக்க என்று வெளியே சுற்ற முடியாத கட்டுப்பாடுகள் இருக்கும் பெண்கள் கூட இந்த பாவா, சந்தூரி, கொடியேற்றத்தின் பெயாகளால் சுலபமாக இரவு நேரங்களில் வெளியே சென்று வர நல்ல வாய்ப்பாக அமைந்து விட்டிருக்கின்றன.