Saturday, July 5, 2008

மதுக்கூரில் போதை எதிர்ப்பு தின நிகழ்ச்சி

மத்திய அரசின் களவிளம்பரத் துறை, மதுக்கூர் டிரேடா தொண்டு நிறுவனம் சார்பில் சர்வதேச போதை எதிர்ப்பு தின சிறப்பு நிகழ்ச்சி மதுக்கூரில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மதுக்கூர் பள்ளித் தலைமையாசிரியர் சாந்தகுமாரி தலைமை வகித்தார். களவிளம்பரத் துறை அலுவலர் ஆ. இளங்கோவன், தொண்டு நிறுவன இயக்குநர் விக்டோரியா மேரி, உதவித் தலைமையாசிரியர்கள் கண்ணன், செல்லத்துரை, லட்சுமணன், அழகர், ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
This post was submitted by முதுவை ஹிதாயத்.