Saturday, September 13, 2008

முத்துப்பேட்டை விநாயகர் சிலை ஊர்வலம்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் வியாழக்கிழமை பிற்பகல் (11-09-08) அன்று நடைபெற்றது. இந்து முன்னணி மாநிலத் தலைவர் அரசு ராஜா, பாஜக துணைத் தலைவர் எச். ராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஊர்வலம் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகள் வழியாக இந்த ஊர்வலம் வலம் வந்தது. இதற்கு அப்பகுதி முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.



இதனை இந்து முன்னணியினர் கடுமையாக ஆச்சேபித்தனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டு கற்களும். செருப்புகளும் வீசப்பட்டன. இதில், காவல் கண்காணிப்பாளர் அமீத்குமார் சிங், தலைமைக் காவலர் செல்வமணி ஆகியோர் காயமடைந்தனர் என்றும் கூறப்படுகின்றது. அப்போது போலிஸார் பள்ளிவாசலில் அத்துமீறி நுழைந்து தடியடி நடத்தினர். இதனால், பள்ளிவாசலில் இருந்த பலர் காயமடைந்தனர். பின்னர் 32 முஸ்லிம்களை போலிஸார் கைது செய்தனர்.