Monday, October 20, 2008

கோவையில் தழிழக சிறைகளில் 11 ஆண்டுகளாக இருக்கும் குணங்குடிஹனிபா உட்பட மற்ற சிறைவாசிகளை விடுதலை
செய்ய முஸ்லிம் சிறைவாசிகளின் குடும்பங்கள் கண்ணைக்கட்டி ஆர்ப்பாட்டம்!
கோவை,அக், 19- தமிழகசிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்கக்கோரி, அவர்களது குடும்பத்தினர் கண்களில் கருப்புத்துணி
கட்டி,கண்டண ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்பாட்டத்திற்க்கு சிறுபான்மை உதவி அறக்கட்டளை தலைவர் உமர்ஷா தலைமை வகித்தார்.துனணத்தலைவர்
அபுதாஹிர் முன்னிலை வகித்தனர்.
தமிழக சிறைகளில் 11 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சிறைவாசிகளை,பாரபாட்சம் பார்க்காமல் விடுதலை செய்ய வேண்டும்.
விசாரனை கைதிகளாக சிறையில் உள்ள குணங்குடி ஹனிபா உள்ளிட்ட ஏழு பேரை உடனடியாக ஜாமினில் விடுவிக்க வேண்டும்.
14 ஆண்டுகளாக சிறையில் மன நோயாளியாக அடைக்கப்பட்டிருக்கும் ஹைதர்அலியை ம்னதாபிமானதடதோடு தம்ழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.
கோவை தனி நீதிமன்றத்தில் 13 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்கள்,தண்டனை காலத்தின் பெரும்பகுதியை சிறையில் கழித்துவிட்டனர்: நியாயமாக இவாகளுக்கு
வழங்க வேண்டிய ஜாமீனை வழங்காமல் அரசு மறுப்பு தெரிவிக்கிறது:இவர்களுக்கு ஜாமின் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தால்,ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பரோல் வழங்கலாம்: ஆனால்,10 ஆண்டுகள்முடித்தும்,
முஸ்லிம் சிறைவாசிகளுக்கு பரோல் மறுக்கப்படுகிறது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால், விரைவில் சென்னையில் தமிழக முதல்வர் விட்டு முன்பு சிறைவாசி குடும்பங்கள் எல்லோரும் முற்றுகையிடுவோம்
என,ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் எச்சரிக்கை விடுத்தனர்.
செய்தி- கோவை தங்கப்பா