Saturday, June 28, 2008

ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய ஊர் பள்ளிவாசல் தடை!

தவ்ஹீத்வாதியின் சிறிய தாயாரின் ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய ஊர் பள்ளிவாசல் தடை!

  • அடக்கஸ்தலத்தின் பூட்டை உடைத்து தவ்ஹீத் சகோதரர் ஜனாசாவைநல்லடக்கம் செய்தனர்!
  • தஞ்சை வலங்கைமான் சம்பவம்!

தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் -இல் 15-06-08 (ஞாயிற்றுக் கிழமை) அன்நூர் இஸ்லாமிக் கல்லூரியின் தலைவருமான சகோ: ஷாஜகான் அவர்களின் சின்ன தாயார் அவர்கள் இயற்கை எய்தினார்கள்.


அவர்களின் நல்லடக்கத்திற்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த வேலையில் 'தன் சின்ன தாயாருக்கு ஜனாஸா தொழுகை நடத்த ஷாஜகான் அவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறை சமாதானத்தில் இறங்கியும் சமாதானம் ஆகாததை தொடர்ந்து பள்ளியின் அடக்கஸ்தலத்தின் பூட்டு உடைக்கபட்டு முறைப்படி ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

நன்றி: த.த.ஜ இணையத்தளம்