Sunday, June 22, 2008

ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருவாரூர், நாகூர் மற்றும் மயிலாடுதுறை, சீர்காழி இடையிலான ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுகவின் மறுமலர்ச்சி ரயில்வே தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தொழிற்சங்க பொதுச் செயலாளர் சி.கண்ணையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மார்க்கத்தில் ஏற்கனவே அகலப் பாதை போடும் பணி முடிவடைந்துவிட்டது. சோதனை ஓட்டமும் மார்ச் மாதத்திலேயே முடிந்து விட்டது. இருப்பினும் இன்னும் ரயில் போக்குவரத்து தொடங்காமல் உள்ளது.

இந்த மார்க்கத்தில் விரைவில் ரயில் போக்குவரத்தைத் தொடங்க ரயில்வே நிர்வாகம் உரிய, விரைவான நடவடிக்கையை மேற்கொள்ள வேன்டும் என்று கோரியுள்ளார்