Showing posts with label அரபிக் கல்லூரி. Show all posts
Showing posts with label அரபிக் கல்லூரி. Show all posts

Friday, July 3, 2009

தோப்புத்துறையில் இஸ்லாமிய மார்க்கத்தை சீரழிக்கும் கந்தூரி விழா

நாகை மாவட்டம், தோப்புத்துறையில் இஸ்லாமிய மார்க்கத்தை சீரழிக்கும்
கந்தூரி விழா
தோப்புத்துறையில் கடந்த இரண்டு ( 2,3 ஜூலை) நாட்காளாக இஸ்லாமிய மார்க்கத்திற்கு சவால் விடும் பொருட்டு வெகு ஜோராக கந்தூரி விழா நடந்தது, சந்தனக் கூட்டுக்கு முதல் நாளான 2 ஆம் தேதி மாபெரும் இன்னிசையுடன் நடன நிகழ்ச்சி நடந்தது, அதில் ஆண்களும்,பெண்களும் மற்றும் சமாதி வழிபாட்டுக்காரர்களும் திரளனோர் கண்டுகளித்தனர், பெண்களுக்கான பகுதியில் சில வெளியூர் ஆண்களும் நின்றதால் சிறு கைகலப்பு நடந்தது,அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் சந்தனக் கூடு நிகழ்ச்சியும் ஆண்களும் பெண்களும் கலந்துக் கொண்டனர்,ஏகத்துவம் எழுச்சி அடைந்த காலத்திலும் இஸ்லாத்திற்கே சவால் விடும் அளவிற்கு நடந்தது குறிப்பிடத்தக்கது,இதுக்குறித்து பின்வரும் கட்டுரையை வாசித்து வரக் கூடிய காலங்களில் இந்த மாதிரியான மாபெரும் தீங்குகளிருந்து நம் குடும்பத்தை காப்பற்ற முயற்சி செய்வொம்,இறைவன் நம்மை காப்பற்றுவனாக…


- ஆதம்.ஆரிபின்

சந்தனக் கூடும் – சமாதி வழிபாடும்

நபிமார்களுக்குப் பிறகு அவர்களின் சீரிய தெண்டுகளை அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின நேசர்கள் செய்தார்கள். அறியாமை இருளில் மூழ்கிக் கிடற்த சமுதாயத்தைத் தட்டி எழுப்பினார்கள். இவர்களின் உயரிய போதனைகளால் உறங்கிக் கிடந்த சமுதாயம் உணர்வு பெற்றது. இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் எழுச்சி பெற்றனர். ஏராளமானோர் நேர் வழி பெற்றனர்.அதற்காக அவ்லியாக்கள் என்னும் அந்த இறை நேசச் செல்வர்களை நாம் போற்ற வேண்டும். கண்ணியப் படுத்த வேண்டும்.
அவர்களைப் போற்றுவது கண்ணியப்படுத்துவது என்பதெல்லாம், அவர்கள் வாழ்ந்த முறைப்படி நாமும் வாழ்வதும், அவர்கள் பேணி நடந்த நபி வழியை நாமும் பேணி நடப்பதும் தான்.அதை விட்டு விட்டு அவர்களின் கப்ருகளின் மீது கட்டடம் கட்டி, கந்தூரி என்ற பெயரில் ஆண்டு தோறும் கல்லறைகளுக்கு விழா எடுப்பதும், அர்ச்சனையும் ஆராதனையும் செய்வதும், நேர்ச்சை என்ற பெயரில் சமாதிகளை நாடிச் சென்று முடி எடுப்பதும், காணிக்கை செலுத்துவதும், உரூஸ் என்ற பெயரில் பாட்டுக் கச்சேரியும் பரத்தையர் நாட்டியமும் நடத்தி கண்டு களிப்பதும், சந்தனக் கூடு என்ற பெயரில் சமாதிகளுக்கு சந்தனத்தில் அபிஷேகம் செய்வதும், இவைகள் யாவுமே அந்த இறை நேசர்களை கேவலப் படுத்தும் செயல்களே தவிர கண்ணியப்படுத்தும் செயல்கள் அல்ல.
‘எனது கப்ரைத் திரு விழா நடத்தும் இடமாக ஆக்கி விடாதீர்கள்’ என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
(அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி) ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத்)
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலத்திலேயே விழா நடத்துவது கூடாது என்றிருக்க -அவ்லியாக்களின் கப்ருகளில் ஆண்டு தோறும் விழா நடத்துவது எவ்வளவு பெரிய பாவம் என்பதை உணர வேண்டும்.
அவ்லியாக்களின் சமாதிகளுக்குப் பூமாலை போடுவதும், போர்வை வாங்கிப் போர்த்துவதும், உண்டியலில் காணிக்கை போடுவதும், பாவச் செயல்களில் உள்ளவை.பூமாலையாலும் போர்வையாலும் அந்தப் புனிதர்களுக்கு என்ன பிரயோஜனம்? உண்டியலில் போடும் காணிக்கையால் அந்த உத்தமர்களுக்கு என்ன பயன்? இறை நேசர்கள் பெயரால் இடைத் தரகர்கள் அல்லவா கொள்ளை அடிக்கிறார்கள்?
யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக. அவர்கள் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்களாக்கி விட்டனர். அறிவிப்பவர்: அபூஹூiரா(ரலி) ஆதாரம் : முஸ்லிம்)
நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்கள் ஆக்கி விட்டவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்திருக்க, அவ்லியாக்களின் கப்ருகளை வணங்குமிடமாக ஆக்குவது எவ்வளவு பெரிய பாவம்?
பெண்கள் கப்ருஸ்தான்களுக்குச் செல்வதை பெருமானார் (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டிக்கிறார்கள். தர்காக்களுக்குப் பெண்கள் அறவே செல்லக் கூடாது.ஏனெனில் தர்காக்களும் கப்ருஸ்தான்கள் தான்.
கப்ருகளை ஸியாரத் செய்யும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தனர். (அறிவிப்பவர்: அபூ ஹூரைரா(ரலி) ஆதாரம்: அஹ்மத், திர்மிதி)

தர்காக்களுக்குச் செல்லும் பெண்கள் சபிக்கப் பட்டவர்கள். தம் குடும்பப் பெண்களை தர்காக்களுக்கு அழைத்துச் செல்லும் ஆண்கள் மாபெரும் குற்றவாளிகள் என்பதில் சந்தேகமில்லை.

கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப்போகட்டும்-

என்னும் நூலிலிருந்து…

Monday, June 9, 2008

புதிய பாடத்திட்டம் அறிமுகம்

தோப்புத்துறை பெண்கள் அரபிக் கல்லூரியில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் தகவல் : அமீரக கிளை - மர்கஸ்

Wednesday, May 28, 2008

பெண்கள் அரபிக் கல்லுரியின் முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி

நாகை மாவட்டம் தோப்புத்துறை'யில்
"
மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்"


பின்வருமாறு நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது,

நிகழ்ச்சிகள் :
  • அஸ் ஷாலிஹாத் அரபிக் கல்லூரியின் முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி மற்றும் சான்றிதல் வழங்குதல்
  • கோடைக்கால பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு சான்றிதல் மற்றும் பரிசுகள் வழங்குதல்
  • மதரசா மாணவ , மாணவிகளுக்கு சான்றிதல் மற்றும் பரிசுகள் வழங்குதல் மற்றும் மாணவ ,மாணவிகள் கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சிகள்
அனைவரையும் குடும்பத்தோடு அழைக்கிறது ....
தோப்புத்துறை ஜாக் மர்கஸ் நிருவாகம்


Tuesday, May 27, 2008

தோப்புத்துறையில் இஸ்லாமிய பெண்கள் அரபிக் கல்லூரி


நாகப்பட்டினம் மாவட்டம் தோப்புத்துறை யில் மர்கஸ் தெருவில் அமைத்துள்ளது மஸ்ஜிதுல் முஸ்லிமீன் ( மர்கஸ் பள்ளி ), இந்த மர்கசில் ங்கால தொழுகை நடப்பதோடு இஸ்லாமிய பெண்களுக்கு மார்க்கக் கல்வியை போதிப்பதற்காக இங்கு சில ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்க பட்டது தான் "அஸ் சலிஹாத் பெண்கள் அரபிக் கல்லூரி "

இதில் குர்-ஆன், ஹதீஸ் அடிப்படையில் வகுப்புகள் நடத்த படுகிறது, உள்ளுரைச் சார்ந்த மாணவிகள் தற்போது பயின்று வருகிறார்க
ள்,இந்த கல்லுரியை உள்ளூர் ஜாக் ஜமாஅத் -தை சார்ந்தவர்கள் நிர்வகித்து வருகிறார்கள்,இங்கு ஹாஸ்டல் வசதி கிடையாது,

இக்கல்லுரியை விரிவு படுத்தவும் மற்றும் கல்வியை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.